குறள்: 520நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு.

Let king search out his servants' deeds each day;When these do right, the world goes rightly on its way

மு.வரதராசன் உரை

தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கலைஞர் உரை

உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்

Explanation

Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly

Kural Info

குறள் எண்:520
Category:பொருட்பால்
அதிகாரம்:தெரிந்து வினையாடல்
இயல்:அரசியல்