குறள்: 882வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு.

Dread not the foes that as drawn swords appear;Friendship of foes, who seem like kinsmen, fear

மு.வரதராசன் உரை

வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

வாளைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; நண்பரைப்போல் வெளியில் காட்டி மனத்துள் பகைவராக‌வே இருப்போரின் தொடர்புக்கு அஞ்சுக.

கலைஞர் உரை

வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Explanation

Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly

Kural Info

குறள் எண்:882
Category:பொருட்பால்
அதிகாரம்:உட்பகை
இயல்:நட்பியல்