உட்பகை

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 881நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்இன்னாவாம் இன்னா செயின்.

குறள்: 882வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு.

குறள்: 883உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்துமட்பகையின் மாணத் தெறும்.

குறள்: 884மனமாணா உட்பகை தோன்றின் இனமாணாஏதம் பலவும் தரும்.

குறள்: 885உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும்.

குறள்: 886ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிது.

குறள்: 887செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதேஉட்பகை உற்ற குடி.

குறள்: 888அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருதுஉட்பகை உற்ற குடி.

குறள்: 889எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்உட்பகை உள்ளதாங் கேடு.

குறள்: 890உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடனுறைந் தற்று.