குறள்: 884மனமாணா உட்பகை தோன்றின் இனமாணாஏதம் பலவும் தரும்.
If secret enmities arise that minds pervert,Then even kin unkind will work thee grievous hurt
மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.
புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.
மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்
The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations
| குறள் எண்: | 884 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | உட்பகை |
| இயல்: | நட்பியல் |