குறள்: 477ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்போற்றி வழங்கு நெறி.

With knowledge of the measure due, as virtue bids you give!That is the way to guard your wealth, and seemly live

மு.வரதராசன் உரை

தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை

எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.

கலைஞர் உரை

வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்

Explanation

Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property

Kural Info

குறள் எண்:477
Category:பொருட்பால்
அதிகாரம்:வலியறிதல்
இயல்:அரசியல்