மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 471வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல்.
குறள்: 472ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல்.
குறள்: 473உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர்.
குறள்: 474அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும்.
குறள்: 475பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்.
குறள்: 476நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்உயிர்க்கிறுதி ஆகி விடும்.
குறள்: 477ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்போற்றி வழங்கு நெறி.
குறள்: 478ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லைபோகாறு அகலாக் கடை.
குறள்: 479அளவறந்து வாழாதான் வாழ்க்கை உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும்.
குறள்: 480உளவரை தூக்காத ஒப்புர வாண்மைவளவரை வல்லைக் கெடும்.