குறள்: 676முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல்.

Accomplishment, the hindrances, large profits won By effort these compare,- then let the work be done

மு.வரதராசன் உரை

செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க.

கலைஞர் உரை

ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்

Explanation

An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion)

Kural Info

குறள் எண்:676
Category:பொருட்பால்
அதிகாரம்:வினை செயல்வகை
இயல்:அமைச்சியல்