வினை செயல்வகை

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 671சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது.

குறள்: 672தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.

குறள்: 673ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல்.

குறள்: 674வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும்.

குறள்: 675பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல்.

குறள்: 676முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல்.

குறள்: 677செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.

குறள்: 678வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று.

குறள்: 679நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததேஒட்டாரை ஒட்டிக் கொளல்.

குறள்: 680உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்கொள்வர் பெரியார்ப் பணிந்து.