குறள்: 678வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று.

By one thing done you reach a second work's accomplishment; So furious elephant to snare its fellow brute is sent

மு.வரதராசன் உரை

ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.

கலைஞர் உரை

ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்

Explanation

To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another

Kural Info

குறள் எண்:678
Category:பொருட்பால்
அதிகாரம்:வினை செயல்வகை
இயல்:அமைச்சியல்