குறள்: 668கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கங் கடிந்து செயல்.

What clearly eye discerns as right, with steadfast will,And mind unslumbering, that should man fulfil

மு.வரதராசன் உரை

மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

கலைஞர் உரை

மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்

Explanation

An act that has been firmly resolved on must be as firmly carried out without delay

Kural Info

குறள் எண்:668
Category:பொருட்பால்
அதிகாரம்:வினைத்திட்பம்
இயல்:அமைச்சியல்