வினைத்திட்பம்

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 661வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற.

குறள்: 662ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

குறள்: 663கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும்.

குறள்: 664சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்.

குறள்: 665வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும்.

குறள்: 666எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்.

குறள்: 667உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி அன்னார் உடைத்து.

குறள்: 668கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கங் கடிந்து செயல்.

குறள்: 669துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை.

குறள்: 670எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டாது உலகு.