மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 1001வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்செத்தான் செயக்கிடந்தது இல்.
குறள்: 1002பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்மருளானாம் மாணாப் பிறப்பு
குறள்: 1003ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை.
குறள்: 1004எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன்.
குறள்: 1005கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடியுண் டாயினும் இல்.
குறள்: 1006ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்றுஈதல் இயல்பிலா தான்.
குறள்: 1007அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று.
குறள்: 1008நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று.
குறள்: 1009அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டியஒண்பொருள் கொள்வார் பிறர்.
குறள்: 1010சீருடைச் செல்வர் சிறுதுனி மாரவறங்கூர்ந் தனையது உடைத்து.