மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 851இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்பண்பின்மை பாரக்கும் நோய்.
குறள்: 852பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதிஇன்னாசெய் யாமை தலை.
குறள்: 853இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்தாவில் விளக்கம் தரும்.
குறள்: 854இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்துன்பத்துள் துன்பங் கெடின்.
குறள்: 855இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரேமிக்லூக்கும் தன்மை யவர்.
குறள்: 856இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கைதவலும் கெடலும் நணித்து.
குறள்: 857மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்இன்னா அறிவி னவர்.
குறள்: 858இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனைமிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
குறள்: 859இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனைமிகல்காணும் கேடு தரற்கு.
குறள்: 860இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்நன்னயம் என்னும் செருக்கு.