கல்வி

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 391கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.

குறள்: 392எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

குறள்: 393கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.

குறள்: 394உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்.

குறள்: 395உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்.

குறள்: 396தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு.

குறள்: 397யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.

குறள்: 398ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து.

குறள்: 399தாமின் புறுவது உலகின் புறக் கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.

குறள்: 400கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.