மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 811பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது.
குறள்: 812உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்?
குறள்: 813உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர்.
குறள்: 814அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்தமரின் தனிமை தலை.
குறள்: 815செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று.
குறள்: 816பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்ஏதின்மை கோடி உறும்.
குறள்: 817நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும்.
குறள்: 818ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைசொல்லாடார் சோர விடல்.
குறள்: 819கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்பு.
குறள்: 820எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇமன்றில் பழிப்பார் தொடர்பு.