காதற் சிறப்புரைத்தல்

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 1121பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயிறு ஊறிய நீர்.

குறள்: 1122உடம்பொடு உயிரிடை என்னமற் றன்னமடந்தையொடு எம்மிடை நட்பு.

குறள்: 1123கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்திருநுதற்கு இல்லை இடம்.

குறள்: 1124வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்அதற்கன்னள் நீங்கும் இடத்து.

குறள்: 1125உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

குறள்: 1126கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவராநுண்ணியர்எம் காத லவர்.

குறள்: 1127கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

குறள்: 1128நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்அஞ்சுதும் வேபாக் கறிந்து.

குறள்: 1129இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கேஏதிலர் என்னும் இவ் வூர்.

குறள்: 1130உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்ஏதிலர் என்னும் இவ் வூர்.