பெரியாரைத் துணைக்கோடல்

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 441அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல்.

குறள்: 442உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல்.

குறள்: 443அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல்.

குறள்: 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.

குறள்: 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

குறள்: 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.

குறள்: 447இடிக்குந் துணையாரை யாள்வரை யாரேகெடுக்குந் தகைமை யவர்.

குறள்: 448இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்.

குறள்: 449முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.

குறள்: 450பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.